இதய தெய்வம் அம்மா அவர்கள் ஆணைக்கினங்க நெல்லை மாவட்ட அதிமுக சார்பில் இன்று 26.12.2009 இரவு 7 மணியளவில் 139 வது தொடர் சனிக்கிழமை பொதுக்கூட்டம் மானூரில் கழக சிறப்பு பேச்சாளர் திரு.தீப்பொறி ஆறுமுகம் மற்றும் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.பொது மக்கள்,கழக தோழர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.



இன்று 26.12.2009 காலை பாளை பகுதியில் சாலையில் திரியும் மாடுகளை போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து பவுண்டியில் அடைத்து வருகின்றனர்.இதற்கு எதிர்பு தெரிவித்து தெற்கு பஜாரை சேர்ந்த மாட்டு உரிமையாளர்கள்,யாதவர் மகாசபை நெல்லை மாவட்ட தலைவர் திரு.குற்றால முருகன்,நெல்லை மாவட்ட மாநகர் செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் மற்றும் தொண்டர்கள் போலீஸ்சாரின் அத்துமீறலை கண்டித்து சாலை மறியலில் ஈடுப்பட்டு மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து பேச்சு நடத்த வேண்டும் என வலியுருத்தி தொடர்ந்து சாலை ஓரம் அமர்ந்து தர்ணாவில் ஈடு பட்டனர்.நெல்லை அதிமுக வினரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

.

நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஊனமுற்ற சிறுவனுக்கு மூன்று சக்கர சைக்கிள் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா வழங்கினார்கள் உடன் S. முருகேசன்,S.பழனி,A.மகபூப்ஜான்,S.S ஹயாத்

.

திமுக ஆட்சி பொன்விழா தவறானது என்பதை கண்டித்து மாவட்ட கழகம் சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் கழக பேச்சாளர் காந்திமதி நாதன் பேசிய போது உடன் பாப்புலர் முத்தையா,முருகேசன்,பழனி, ssஹாயாத்

.

முன்னாள் முதல்வர் M.G.R அவர்களின் 22வது நினைவு நாளயொட்டி நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கொக்கிரகுளதில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட செயலாளர் திரு பாப்புலர் V.முத்தையா தலைமையில் அதிமுக வினர் மாலை அணிவித்தனர்.மாவட்ட அவைத் தலைவர் திரு.முருகேசன்,துணை செயலாளர் பழனி அவர்கள்,பொருளாளர் திரு.மகபூப்ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கழக தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

.

18.12.2009 சனிக்கிழமை இரவு 7 மணியளவில் மைனாரிட்டி தி.மு.க அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து பேட்டை பல்லிமால் தெருவில் தலைமை கழக பேச்சாளர் திரு.மின்னல் மீனாட்சி சுந்தரம் மற்றும் மாவட்ட கழக செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் கழக தோழர்கள்,பொது மக்கள் திரளாக வந்து சிறப்பித்தனர்.

.


இதயதெய்வம் மாண்புமிகு அம்மா அவர்களின் ஆசியோடு அனைவருக்கும் நெல்லை மாநகர் மாவட்ட கழகம் சார்பில் இனிய கிறிஸ்துமஸ் ற்றும் 2010 புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறார். இந் நன்நாள் அனைவருக்கும் பொன்நாளாக அமைந்திடவும், இனிவரும் நாட்களில் எல்லோருக்கும் எல்லா வளமும், நலமும் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

.






இன்று 17.12.2009 அன்று காலை முதல் மாலை வரை அதிமுக வேட்பாளர் திரு.அம்மன் T.நாராயணன் மற்றும் திரு.ஓ.பன்னிர் செல்வம் ,இளைஞர் பாசரை செயலாளர் திரு.டாக்டர் S. வெங்கடேஷ்,நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் திரு பாப்புலர் V.முத்தையா மற்றும் நிர்வாகிகள்,பொதுமக்கள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர்.

.

நெல்லையில் Dr.அம்பேத்கர் அவர்கள் 53 வது நினைவு தினம் நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சட்ட மேதை Dr. அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தன்று காலை 11 மணி அளவில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் தலைமையில் மாலை அனிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.மற்றும் பொருளாளர் மகபூப்ஜான்,துணைஅ செயலாளர் பழனி,முன்னாள் M.P. முருகேஷன்,M.G.R இளைஞரணி செயலாளர் மணிமாளிகை கணேஷ்,ஈஸ்வர கணபதி,பாலமுருகன்,பகுதி செயலாளர்கள் தச்சை மாதவன்,சந்திரசேகர்,வக்கீல் மணிகண்டன்,MC ராஜன்,வக்கீல் துரை முத்துராஜ்,சி.பா முருகன்,டால் சரவணன் மற்றும் கழக உடண்பிறப்புக்கள்,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


.

நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சனிக்கிழமை தோறும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது 05.12.2009 அன்று இரவு 7 மணியளவில் 136 வது வாராந்திர பொதுக்கூட்டம் நெல்லை டவுன் வாகையடி முனையில் கழகப் பேச்சாளர் திரு.தீ கணல் லட்ச்சுமணன் சிறப்புரை ஆற்றினார்கள்.பொது மக்கள் மற்றும் கழக தோழர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

.

திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 19 ம் தேதி நடக்கிறது அதிமுக வேட்பாளர் அம்மன் T.நாராயணன் அவர்கள் நேற்று 30.11.2009 காலை 11.40 மணிக்கு வ.உ.சி.திடலில் இருந்து திறந்த வேனில் பேரணியாக புறப்பட்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து,பஸ்நிலையம் அருகே உள்ள ஆர் டி.ஒ அலுவலகத்திற்கு சென்றனர் அதிமுக தலைமைக் கழக செயலாளர் திரு.செங்கோட்டையன்,திரு.P.H பாண்டியன்,மாவட்ட செயலாளர் திரு.சண்முக நாதன் முன்னிலையில் 12.15 மணிக்கு உதவி தேர்தல் அலுவலர் பாக்கியம் தேவகிருபை அவர்களிடம் அம்மன் T.நாராயணன் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார்கள் மாற்று வேட்பாளராக முன்னால் ஒன்றிய செயலாளர் பள்ளத்தூர் முருகேசன் மனுதாக்கல் செய்தார்.இதில் மாநில பொருளாளர் திரு.பன்னீர் செல்லம்,முன்னால் அமைச்சர்கள் ஜெயக்குமார்,தளவாய் சுந்தரம்,நத்தம் விஸ்வநாதன்,ராஜ கண்ணப்பன்,பொள்ளாச்சி ஜெயராமன்,நயினார் நாகேந்திரன்,கருப்பசாமி,அன்வர் ராஜா,ஜெனிபர் சந்திரன்,நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V.முத்தையா மதிமுக மாநில துணை பொதுசெயலாளர் நாசரேத் துரை,மதிமுக மாவட்ட செயலாளர் ஜோயல்,இந்திய கம்யூனிஸ்ட் மோகன்ராஜ்,M.L.A கள் ராதாகிருஷ்ணன்,சின்னப்பன்,மோகன் மாவட்டM.G.R மன்ற தலைவர் செல்லதுரை,செயலாளர் தாமோதரன்,மற்றும் பொது மக்கள்,கழக உடண்பிறப்புக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

நெல்லை அதிமுக மாநகர் மாவட்ட,வட்ட நிர்வாகிகள் தேர்தல் 27.11.2009 அன்று காலை துவங்கியது.மானூர் தெற்கு,வடக்கு பகுதிகளுக்கான தேர்தல் புறநகரில் நடந்தது.நெல்லை,பாளை,தச்சை,மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்களுக்கான தேர்தல் பாலபாக்யா நகரில் நடந்தது.இத்தேர்தலில் வட்ட செயலாளர்,இனைச்செயலாளர்,அவைத் தலைவர்,2துணைச் செயலாளர்கள்,3 பிரதிநிதிகள்,பொருளாளர் உள்ளிட்ட 9 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதையொட்டி நேற்று போட்டியிடுவோருக்கு விண்ணப்பங்கள் வினியோகிக்கப் பட்டன.வார்டுகளில் போட்டியிடும் அதிமுகனர் ஒரு குழுவாக தங்களுக்கு தேவையான பதவிகளை கேட்டு மனுத்தாக்கல் செய்தனர் தேர்தல் ஏற்பாடுகளை அமைப்பு செயலாளர் திரு.கருப்பசாமி அவர்கள் தலைமையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.மனுத்தாக்கல் நிகழ்ச்சிகளில் மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா,பொருளாளர் மகபூப்ஜான்,துணைச்செயலாளர்கள் தச்சை மாதவன்,காமராஜ்,சந்திரசேகர்,ஹயாத்,அஃப்ரின் பீர்முகமது,அசன் ஜாபர் அலி,அப்துல் அஜிஸ்,மணிமாளிகை கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

.


நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா வெளியிட்டுள்ள அறிக்கை:
கழக நிரந்தர பொதுச்செயலாளர் அம்மா அவர்களின் உத்தரவுப்படி மாநகர் மாவட்ட அமைப்பு தேர்தல் [27.11.2009]துவங்குகிறது.மாநில அமைப்பு செயலாளர் கருப்பசாமி அவர்கள் பொறுப்பில் இத் தேர்தல் வரும் 30ம் தேதி வரை நடைபெறும்.நெல்லை,பாளை,தச்சை,மேலப்பாளையம் பகுதிகளுக்கு பாலபாக்யா நகரில் உள்ள அன்னை மகாலிலும்,மானூர் தெற்கு ஒன்றியத்திற்கு சீதற்பநல்லூர் சமுதாய கூடத்திலும்,மானூர் வடக்கு ஒன்றியத்திற்கு E.S.V மகாலிலும்,நாரணம்மாள்புரம்,சங்கர்நகர் பகுதிகளுக்கு தாழையூத்து பசும்பொன் கல்யாண மண்டபத்திலும் தேர்தல் நடைபெறும்.இத்தேர்தலில் கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் அனைவரும் தங்கள் உறுப்பினர் அட்டையோடு கலந்து கொள்ள வேண்டும் மாநகர் மாவட்ட அளவில் நடக்கும் இத்தேர்தலில் வட்ட நிர்வாகிகள் மற்றும் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


.


ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயர் வைக்க வேண்டுமென வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று ராதாபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.இதற்க்கு வள்ளியூர் டி.எஸ்.பி அனுமதி மறுத்து மனுவை நிராகரித்தார்.இதையடுத்து நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் திரு.செந்தூர்பாண்டியன்,மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா ஜெ.பேரவை துணைசெயலாளர் திருவை.சின்னதுரை மற்றும் முன்னால் M.L.Aமாணிக்கராஜ் அவர்கள்,வக்கீல் இன்பதுரை அவர்கள்,V.P.மூர்த்தி,R.S முருகன் அவர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டதிற்கு அனுமதி கேட்டு S.P ஆஸ்ரா கர்க்கை சந்தித்து மனு கொடுக்க வந்தனர்.இது குறித்து செந்தூர் பாண்டியன் அவர்கள் கூறும்போது ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என்று பொதுச்செயலாளர் திரு.ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.அம்மாவின் அனுமதியுடன் தொடர்ந்து நாங்கள் போராடுவோம் என்று அறிவித்தனர்.


.

நெல்லை மாநகர் அதிமுக சார்பில் மைனாரட்டி திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும்,விலைவாசி உயர்வை,கண்டித்தும்,சனிக்கிழமை தோறும் நடைபெறும் தொடர் கண்டன பொதுக்கூட்டம் இன்று 21.11.2009 சனிக்கிழமை அன்று நெல்லை மாநகர் தச்சை பகுதியில் 134 வது தொடர் கண்டன பொதுக்கூட்டத்தில் கழக சிறப்பு பேச்சாளர்கள்
திரு. நெல்லை லெட்சுமணன்,திரு.சி.பா.முருகன் அவர்கள் மற்றும் மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்களும் சிறப்புரையாறினார்கள் கழக முன்னோடிகள்,பொதுமக்கள் ,இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்ந்தவர்கள் ,தொண்டர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.


.



நெல்லை மாநகர் மாவட்ட அ தி மு க சார்பில் 18.11.2009 அன்று காலை கொட்டும் மழையிலும் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள்,திரு.S.முருகேசன் அவர்கள் மாவட்ட அவைத்தலைவர் தலைமையில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் சிலைக்கு,அதை தொடர்ந்து நெல்லை அரசு பொருட்காட்சி திடலில் அமைந்துள்ள அவரது மணி மண்டபதில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.கழக முன்னோடிகள் பொது மக்கள் திரளாக கலந்து சிறப்பித்தனர்...........


.



இன்று 17.11.2009 காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இதயதெய்வம் அம்மா அவர்கள் ஆனைக்கினங்க நெல்லை மாநகர் மாவட்ட வார்டு,பகுதி,வட்ட நிர்வாகிகளை தேர்வு செய்ய சம்பந்தமாக கழக M.G.R இளைஞரனி செயலாளர் திரு.K.A.K முகில் அவர்கள் தலைமையில் மற்றும், கழக M.G.R இளைஞரணி துணைச்செயலாளர் திரு.S.சரவணப்பெருமாள்,நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் முன்னிலையில் மற்றும் மாவட்ட துனைச்செயலாளர் திரு.பழனி,மாவட்ட பொருளாளர் திரு மகபூப்ஜான்,இளைஞரனி மாவட்ட செயளாலர் திரு.மணிமாளிகை கணேஷ் மற்றும் கழக அமைப்பினர்.கழக உடன் பிறப்புகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.


.


இதயதெய்வம் அம்மா அவர்கள் ஆனைக்கினங்க நெல்லை மாநகர் மாவட்ட M.G.R இளைஞரணி நிர்வாகிகள் அமைப்பை எற்படுத்த கழக M.G.R இளைஞர் அணி செயலாளர் திரு K.A.K முகில் அவர்கள், மற்றும் கழக M.G.R இளைஞர் அணி துணைசெயலாளர் திரு.S.சரவணப்பெருமாள் அவர்கள் நாளை 17.11.2009 அன்று நெல்லை வருகை தர இருப்பதால் மாவட்ட நிர்வாகிகள்,தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து சிறப்பிக்குமாறு நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் செய்தி வெளியுட்டுள்ளார்கள்.



திருமிகு Dr.S.வெங்கடேஷ் M.D கழக இளைஞர்,இளம் பெண்கள் பாசறை செயலாளர் அவர்களுடன் திரு பாப்புலர் V.முத்தையா மாநகர் மாவட்ட செயலாளர் அவர்கள்.









கழக பொதுச்செயலாளர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க திருநெல்வேலி மாநகர் மாவட்ட இளைஞர் பாசறை,இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகளின் மாபெரும் ஆலோசனை கூட்டம் மிக விமர்சியாக நடைப்பெற்றது.
தலைமை;திருமிகு Dr.S.வெங்கடேஷ் M.D கழக இளைஞர்,இளம் பெண்கள் பாசறை செயலாளர் அவர்கள்.
முன்னிலை;பாப்புலர் V.முத்தையா மாநகர் மாவட்ட செயலாளர் அவர்கள்.மற்றும் கழக முன்னோடிகள் திரளாக கலந்து சிறப்பித்தனர்.

.

அனை

த்து இந்திய "அண்ணா" திராவிட முன்னேற்ற கழக
38 வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி நெல்லையில் மாநகர அ.தி.மு.க சார்பில்
முன்னாள் அமைச்சர் திரு.ஜனார்த்தனம் அவர்கள் தலைமையில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் (மாநகர் மாவட்ட செயலாளர்)மற்றும் கழக உடன் பிறப்புக்கள் அனைவரும் கலந்து கொன்டனர்.

"கரு 'இருள் ஆளும் தமிழகத்தில்
வெளிச்சத்திற்கு விழாவா?
தயார் படுத்திக்கொள்ளுங்கள் உங்கள்
சுட்டுவிரல் தீக்குச்சியை
அடுத்த தேர்தலில்
அம்மா எனும் வெளிச்சம் விரிக்க..
ஆம்! அன்றுதான் நமக்கு தீப ஒளி நாள்.....

உங்களில் ஒருவன்....
பாப்புலர் V.முத்தையா
மாநகர் மாவட்ட கழக செயலாளர் அவர்கள்




திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மானூர் தெற்க்கு,வடக்கு ஒன்றிய கிளைக்கழக செயலாளர்கள்,ஒன்றிய கவுன்சிலர்கள்,ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் தீபாவளி திருநாள் வாழ்துக்கள் பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு திரு.பாப்புலர் V.முத்தையா மாநகர் மாவட்ட கழக செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நாள்;14.10.2009 இடம்;நெல்லை மாநகர் மாவட்ட கழக அலுவலகம்.நேரம்;மாலை 5 மணி