நெல்லை அதிமுக மாநகர் மாவட்ட,வட்ட நிர்வாகிகள் தேர்தல் 27.11.2009 அன்று காலை துவங்கியது.மானூர் தெற்கு,வடக்கு பகுதிகளுக்கான தேர்தல் புறநகரில் நடந்தது.நெல்லை,பாளை,தச்சை,மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்களுக்கான தேர்தல் பாலபாக்யா நகரில் நடந்தது.இத்தேர்தலில் வட்ட செயலாளர்,இனைச்செயலாளர்,அவைத் தலைவர்,2துணைச் செயலாளர்கள்,3 பிரதிநிதிகள்,பொருளாளர் உள்ளிட்ட 9 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதையொட்டி நேற்று போட்டியிடுவோருக்கு விண்ணப்பங்கள் வினியோகிக்கப் பட்டன.வார்டுகளில் போட்டியிடும் அதிமுகனர் ஒரு குழுவாக தங்களுக்கு தேவையான பதவிகளை கேட்டு மனுத்தாக்கல் செய்தனர் தேர்தல் ஏற்பாடுகளை அமைப்பு செயலாளர் திரு.கருப்பசாமி அவர்கள் தலைமையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.மனுத்தாக்கல் நிகழ்ச்சிகளில் மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா,பொருளாளர் மகபூப்ஜான்,துணைச்செயலாளர்கள் தச்சை மாதவன்,காமராஜ்,சந்திரசேகர்,ஹயாத்,அஃப்ரின் பீர்முகமது,அசன் ஜாபர் அலி,அப்துல் அஜிஸ்,மணிமாளிகை கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

.


நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா வெளியிட்டுள்ள அறிக்கை:
கழக நிரந்தர பொதுச்செயலாளர் அம்மா அவர்களின் உத்தரவுப்படி மாநகர் மாவட்ட அமைப்பு தேர்தல் [27.11.2009]துவங்குகிறது.மாநில அமைப்பு செயலாளர் கருப்பசாமி அவர்கள் பொறுப்பில் இத் தேர்தல் வரும் 30ம் தேதி வரை நடைபெறும்.நெல்லை,பாளை,தச்சை,மேலப்பாளையம் பகுதிகளுக்கு பாலபாக்யா நகரில் உள்ள அன்னை மகாலிலும்,மானூர் தெற்கு ஒன்றியத்திற்கு சீதற்பநல்லூர் சமுதாய கூடத்திலும்,மானூர் வடக்கு ஒன்றியத்திற்கு E.S.V மகாலிலும்,நாரணம்மாள்புரம்,சங்கர்நகர் பகுதிகளுக்கு தாழையூத்து பசும்பொன் கல்யாண மண்டபத்திலும் தேர்தல் நடைபெறும்.இத்தேர்தலில் கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் அனைவரும் தங்கள் உறுப்பினர் அட்டையோடு கலந்து கொள்ள வேண்டும் மாநகர் மாவட்ட அளவில் நடக்கும் இத்தேர்தலில் வட்ட நிர்வாகிகள் மற்றும் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


.


ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயர் வைக்க வேண்டுமென வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று ராதாபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.இதற்க்கு வள்ளியூர் டி.எஸ்.பி அனுமதி மறுத்து மனுவை நிராகரித்தார்.இதையடுத்து நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் திரு.செந்தூர்பாண்டியன்,மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா ஜெ.பேரவை துணைசெயலாளர் திருவை.சின்னதுரை மற்றும் முன்னால் M.L.Aமாணிக்கராஜ் அவர்கள்,வக்கீல் இன்பதுரை அவர்கள்,V.P.மூர்த்தி,R.S முருகன் அவர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டதிற்கு அனுமதி கேட்டு S.P ஆஸ்ரா கர்க்கை சந்தித்து மனு கொடுக்க வந்தனர்.இது குறித்து செந்தூர் பாண்டியன் அவர்கள் கூறும்போது ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என்று பொதுச்செயலாளர் திரு.ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.அம்மாவின் அனுமதியுடன் தொடர்ந்து நாங்கள் போராடுவோம் என்று அறிவித்தனர்.


.

நெல்லை மாநகர் அதிமுக சார்பில் மைனாரட்டி திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும்,விலைவாசி உயர்வை,கண்டித்தும்,சனிக்கிழமை தோறும் நடைபெறும் தொடர் கண்டன பொதுக்கூட்டம் இன்று 21.11.2009 சனிக்கிழமை அன்று நெல்லை மாநகர் தச்சை பகுதியில் 134 வது தொடர் கண்டன பொதுக்கூட்டத்தில் கழக சிறப்பு பேச்சாளர்கள்
திரு. நெல்லை லெட்சுமணன்,திரு.சி.பா.முருகன் அவர்கள் மற்றும் மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்களும் சிறப்புரையாறினார்கள் கழக முன்னோடிகள்,பொதுமக்கள் ,இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்ந்தவர்கள் ,தொண்டர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.


.



நெல்லை மாநகர் மாவட்ட அ தி மு க சார்பில் 18.11.2009 அன்று காலை கொட்டும் மழையிலும் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள்,திரு.S.முருகேசன் அவர்கள் மாவட்ட அவைத்தலைவர் தலைமையில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் சிலைக்கு,அதை தொடர்ந்து நெல்லை அரசு பொருட்காட்சி திடலில் அமைந்துள்ள அவரது மணி மண்டபதில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.கழக முன்னோடிகள் பொது மக்கள் திரளாக கலந்து சிறப்பித்தனர்...........


.



இன்று 17.11.2009 காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இதயதெய்வம் அம்மா அவர்கள் ஆனைக்கினங்க நெல்லை மாநகர் மாவட்ட வார்டு,பகுதி,வட்ட நிர்வாகிகளை தேர்வு செய்ய சம்பந்தமாக கழக M.G.R இளைஞரனி செயலாளர் திரு.K.A.K முகில் அவர்கள் தலைமையில் மற்றும், கழக M.G.R இளைஞரணி துணைச்செயலாளர் திரு.S.சரவணப்பெருமாள்,நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் முன்னிலையில் மற்றும் மாவட்ட துனைச்செயலாளர் திரு.பழனி,மாவட்ட பொருளாளர் திரு மகபூப்ஜான்,இளைஞரனி மாவட்ட செயளாலர் திரு.மணிமாளிகை கணேஷ் மற்றும் கழக அமைப்பினர்.கழக உடன் பிறப்புகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.


.


இதயதெய்வம் அம்மா அவர்கள் ஆனைக்கினங்க நெல்லை மாநகர் மாவட்ட M.G.R இளைஞரணி நிர்வாகிகள் அமைப்பை எற்படுத்த கழக M.G.R இளைஞர் அணி செயலாளர் திரு K.A.K முகில் அவர்கள், மற்றும் கழக M.G.R இளைஞர் அணி துணைசெயலாளர் திரு.S.சரவணப்பெருமாள் அவர்கள் நாளை 17.11.2009 அன்று நெல்லை வருகை தர இருப்பதால் மாவட்ட நிர்வாகிகள்,தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து சிறப்பிக்குமாறு நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் செய்தி வெளியுட்டுள்ளார்கள்.



திருமிகு Dr.S.வெங்கடேஷ் M.D கழக இளைஞர்,இளம் பெண்கள் பாசறை செயலாளர் அவர்களுடன் திரு பாப்புலர் V.முத்தையா மாநகர் மாவட்ட செயலாளர் அவர்கள்.









கழக பொதுச்செயலாளர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க திருநெல்வேலி மாநகர் மாவட்ட இளைஞர் பாசறை,இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகளின் மாபெரும் ஆலோசனை கூட்டம் மிக விமர்சியாக நடைப்பெற்றது.
தலைமை;திருமிகு Dr.S.வெங்கடேஷ் M.D கழக இளைஞர்,இளம் பெண்கள் பாசறை செயலாளர் அவர்கள்.
முன்னிலை;பாப்புலர் V.முத்தையா மாநகர் மாவட்ட செயலாளர் அவர்கள்.மற்றும் கழக முன்னோடிகள் திரளாக கலந்து சிறப்பித்தனர்.

.