அதிமுக இளைஞர் பாசறைக்கு புதுவடிவில் அடையாள அட்டைநெல்லை மாநகரில் 11 ஆயிரம் பேருக்கு வினியோகம்.அதிமுக வில் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் கடந்த 2008 ம் ஆண்டு இளைஞர் இளம்பெண்கள் பாசறை உருவாக்கப்பட்டது அனைத்து மாவட்டங்களிலும் வார்டு வாரியாக உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரப்படுத்தப் பட்டது.பாசறையில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு முதலில் ஒரு இளைஞரும் இளம்பெண்ணும் அதிமுக கொடியை பிடித்திருப்பது போன்ற வடிவில் உறுப்பினர் அட்டை அச்சிட்டு வழங்கப்பட்டது.அட்டையின் பின்பக்கத்தில் உறுப்பினரின் பெயர் மற்றும் இதர விவரங்களை கையால் எழுதி வழங்கினர்.இந் நிலையில் புதிய வடிவத்தில் பாசறை உறுப்பினர் அடையாள அட்டை அச்சிட்டு தலைமை கழகத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.அட்டையின் பி புறத்தில் உறுப்பினர் விவரங்கள் கம்ப்யூட்டர் மூலம் அச்சிடப்பட்டுள்ளது.நெல்லை மாநகரில் 55 வார்டுகளில் பாசறை உறுப்பினர்களாக உள்ள 5 ஆயிரத்து 859 இளம்பெண்கள்,5 ஆயிரத்து 76 இளைஞர்கள் உட்பட  மொத்தம் 10 ஆயிரத்து 935 பேருக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக பாசறை மாவட்ட செயலாளர் திரு.பரமசிவன் தெரிவித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் உடன் இருந்தார்கள்.

.

அண்ணா தொழிற்சங்க ஆலோசனை கூட்டம். எதிர்க்கட்சிகள் பந்த் குறித்து ஆலோசனை கூட்டம். மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பொன்னுசாமி அவர்கள் தலைமையில் நடந்தது.இதில் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பாப்புலர் V.முத்தையா,பொருளாளர் மகபூப்ஜான்,துணை செயலாளர் பழனி மற்றும் கிருஷ்ணமூர்த்தி,முருகன்,கண்ணன்,வேலாயுதம்,சிவா,கோவிந்தராஜ்,
அய்யப்பன்,குமரன்,மதிமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த சுப்பையா மற்றும் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களை சேர்ந்த காசிவிஸ்வநாதன்,கருமலையான்,ஆறுமுகம்,நாதன்,மோகன்,சுப்பையா,
 உச்சிமாகாலி உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

.

நெல்லை சட்டசபை தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் ஸ்.முருகேசன் அவர்கள் தலைமையில் நடந்தது.பொருளாளர் மகபூப்ஜான்,துணைசெயலாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் :ஜுலை 14 ம் தேதி வரை நடக்கும் வாக்காளர்கள் சேர்ப்பு சிறப்பு முகாமின்போது கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்கள் பகுதியில் உள்ள 18 வயது நிரப்பிய புதிய வாக்காளர்கள்,விடுபட்ட வாக்காளர்கள் பெயர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.வரும் 10,11 ம் தேதிகளில் நடக்கும் சிறப்பு முகாம்களில் அதிமுக சார்பில் ஒரு முகவரை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில் தொகுதி இணைசெயலாளர்கள் பால் கண்ணன்,பரமசிவன்,மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளார் வக்கீல் B.மணிகண்டன்,கங்கை முருகன்,பழவூர் வேலாயுதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நெல்லை சட்டசபை தொகுதி செயலாளர் பல்லிக்கோட்டை செல்லதுரை அவர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

.

 நெல்லையில் அதிமுக ஆலோசனை கூட்டம்.அம்மா அவர்கள் ஆணைக்கினங்க  05.07.2010 அன்று நடக்கவிருக்கும் பந்த் தொடர்பான அதிமுக ஆலோசனை கூட்டம் நெல்லை மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்திக்கு மாநகர் மாவட்ட தலைவர் முருகேசன் அவர்கள் தலைமை வகித்தார்.மாநில M.G.R  இளைஞர் அணி துணை செயலாளர் S.சரவணபெருமாள் அவர்கள்,மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V.முத்தையா அவர்கள்,துணை தலைவர் பழனி,பொருளாளர் மகபூப்ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாதவன்,கயாத,மோகன்,கணேஷ்,ஜெரால்ட்,திருமலையப்பன்,
ஷாஜகான்,நவ்ஷாத்,கதிரவன்,முருகன்,வேலாயுதம்,சாகுலமீது,
நசாக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

.