பாளை 23வது வார்டில் அம்மா அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக கொடியேற்று விழா மற்றும் அம்மா அவர்கள் ஆணைப்படி தண்ணீர் பந்தல் திறப்புவிழா 19.04.2010 அன்று நடந்தது.வார்டு அவைத்தலைவர் ஆனந்தநம்பி தலைமை வகுத்தார் மாநகர் மாவட்ட பேரவை இணை செயலாளர் செந்தில் ஆறுமுகம் முன்னாள் கவுன்சிலர் கருடன் ராஜகோபால்,பகுதி பேரவை செயலாளர் ராஜன்,பாளை சட்ட மன்ற செயலாளர் ஆதித்தன்,மாவட்ட துணை செயலாளர் பழனி முன்னிலை வகித்தனர்.பகுதி துணை செயலாளர் அப்ரின் பீர்முகமது வரவேற்றார்.மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V.முத்தையா அவர்கள் கோடைக்காலத்தை முன்னிட்டு கட்சி சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்கள்.முன்னாள் மாவட்ட மன்ற செயலாளர் சங்கரன்,இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் வக்கீல் சிவா 14வது வட்ட செயலாளர் சப்பாணி முத்து மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் மாரிமுத்து நன்றி கூறினார்.ஏற்பாடுகளை வார்டு வட்ட செயலாளர் மைதின் கம்பர்,இணை செயலாளர் பொன்ராஜ்,பொருளாளர் சந்திரசேகர்,மேலமைப்பு பிரதிநிதிகள் கணேசன்,பாரதி,முத்துகுமார் செய்திருந்தனர்.

.

0 comments:

Post a Comment