நெல்லை சட்டசபை தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் ஸ்.முருகேசன் அவர்கள் தலைமையில் நடந்தது.பொருளாளர் மகபூப்ஜான்,துணைசெயலாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் :ஜுலை 14 ம் தேதி வரை நடக்கும் வாக்காளர்கள் சேர்ப்பு சிறப்பு முகாமின்போது கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்கள் பகுதியில் உள்ள 18 வயது நிரப்பிய புதிய வாக்காளர்கள்,விடுபட்ட வாக்காளர்கள் பெயர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.வரும் 10,11 ம் தேதிகளில் நடக்கும் சிறப்பு முகாம்களில் அதிமுக சார்பில் ஒரு முகவரை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில் தொகுதி இணைசெயலாளர்கள் பால் கண்ணன்,பரமசிவன்,மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளார் வக்கீல் B.மணிகண்டன்,கங்கை முருகன்,பழவூர் வேலாயுதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நெல்லை சட்டசபை தொகுதி செயலாளர் பல்லிக்கோட்டை செல்லதுரை அவர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

.

0 comments:

Post a Comment