சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உடனடி முன்னுரிமை தரப்படும் ஆளுநரை சந்தித்த பின்பு புரட்சித்தலைவி அம்மா பேட்டி.


சென்னை, மே. 16
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உடனடி முன்னுரிமை அளிக்கப்படும் என முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கூறியுள்ளார்கள். ஆளுநரை சந்தித்த பின் கழகப் பொதுச்
செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆளுநர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள். அதன் பிவரம் வருமாறு:

கேள்வி: நீங்கள் ராஜ்பவனுக்கு வருகை தந்தது பற்றி...?
புரட்சித்தலைவி அம்மா: நான் பலமுறை ராஜ்பவனுக்கு வந்துள்ளேன். இப்போது வருவது புதிது அல்ல.

கேள்வி: தமிழக மக்களுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன?
புரட்சித்தலைவி அம்மா: இனிவரும் காலங்களில் தமிழக மக்கள் எந்தவித அச்சமும் படத் தேவை இல்லை. மக்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழலாம்.

கேள்வி: சோனியாகாந்தி தங்களை தேநீர் விருந்துக்குஅழைத்துஇருக்கிறாரே செல்வீர்களர்?
புரட்சித்தலைவி அம்மா: எங்கள் கட்சித்தேர்தலில் வெற்றி பெற்றதற்காக சோனியாகாந்தி தொலைபேசி மூலம் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்.

கேள்வி: நீங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு எதற்கு முன்னுரிமை அளிப்பீர்கள்?
புரட்சித்தலைவி அம்மா: ஏற்கெனவே கடந்த 13 ந் தேதி இதுபற்றி விரிவாக சொல்லி உள்ளேன்.

கேள்வி: மீண்டும் கேட்கிறோம், உங்கள்பணிகளில் எதற்கு மிக முன்னுரிமைகள்
வழங்குவீர்கள்?
புரட்சித்தலைவி அம்மா: முதலாவதாக தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீரமைக்க
வேண்டும். தமிழகத்தின் பொருளாதாரமே முற்றிலும் தடம் புரண்டு கிடக்கிறது. அதை சரியான பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். கடந்த 5 ஆண்டாக தமிழகம் ஒரு இருண்ட காலத்திற்கு சென்றதுபோல நிலைமை உள்ளது. இதை சீர்ப்படுத்தி வளர்ச்சி பாதையில் தமிழகத்தை கொண்டு செல்ல பல்வேறு முன்னேற்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும். தொடர்ந்து தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டை சரிப்படுத்த வேண்டும். விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும். இப்படி நிறை
முன்னுரிமை பணிகள் உள்ளன. இவை அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றர்க
செயல்படுத்துவோம்.

கேள்வி: எப்போது நீங்கள் டெல்லி செல்வீர்கள்?
புரட்சித்தலைவி அம்மா: முதலில் பதவி ஏற்பு நிகழ்ச்சி. அதன் பிறகு மற்றவற்றை பார்ப்போம்.

கேள்வி: பெட்ரோல் விலை உயர்வு குறித்து உங்கள் கருத்து என்ன?
புரட்சித்தலைவி அம்மா: இது மிகுந்த துரதிருஷ்டவசமான நடவடிக்கை. மக்களுக்கு
பெரும் துன்பத்தை ஏற்படுத்தும்.

கேள்வி: பதவி ஏற்பு விழாவிற்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை அழைப்பீர்களா?
புரட்சித்தலைவி அம்மா: நிச்சயமாக, அவர்களும் எங்களது கூட்டணியினர், அவர்களும் வெற்றி பெற்று இருக்கிறார்கள். எல்லோருக்கும் நிச்சயமாக அழைப்பு விடுப்போம்.

இவ்வாறு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.

0 comments:

Post a Comment